close
Choose your channels

'சத்யா' சீரியல் ஆயிஷாவுக்கு திருமணமாகிவிட்டதா? போட்டோஷூட்டால் வந்த குழப்பம்!

Thursday, September 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று ’சத்யா’ என்பதும் இதில் விஷ்ணு மற்றும் ஆயிஷா ஜோடியாக நடித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

ஆண் போன்று தைரியமாகவும் கம்பீரமாகவும் இருக்கும் கேரக்டரில் நடித்துள்ள சத்யா ஆயிஷாவுக்கு ரசிகர்களின் ஆதரவு பெருகி வருகிறது என்பதும் இந்த சீரியல் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய சீரியலாக மாறி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த சீரியல் முதல் பாகம் முடிந்து தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’சத்யா’ சீரியலில் நாயகியாக நடித்து வரும் ஆயிஷா, சமூக வலைதளங்களில் பிரபலம் என்பதும் குறிப்பாக இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆயிரக்கணக்கானோர் ஃபாலோ செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’சத்யா’ சீரியல் நடிகை ஆஷா திடீரென நெற்றியில் மற்றும் நெற்றி வகிட்டில் குங்குமம் பொட்டு வைத்து இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் நெட்டிசன்கள் அவருக்கு திருமணம் முடிந்து விட்டதா? என குழப்பம் அடைந்தனர்.

இதுகுறித்து பலர் உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா? என்று கேள்வியை எழுப்பிய நிலையில் அவர் இது குறித்து விளக்கமளித்துள்ளார். ’அது ஒரு போட்டோஷுட் புகைப்படம் என்றும் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை’ என்றும் அவர் கூறியுள்ளார். இருப்பினும் இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.