close
Choose your channels

திருமண நாளில் சாயிஷா வெளியிட்ட ரொமான்ஸ் புகைப்படம்: லைக் செய்த ப்ரியா அட்லி!

Wednesday, March 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் நட்சத்திர தம்பதிகளில் ஒன்றான ஆர்யா மற்றும் சாயிஷா தம்பதிகளுக்கு திருமணமாகி இன்றுடன் இரண்டு வருடங்கள் ஆகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் தேதி ஆர்யா மற்றும் சாயிஷா ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றது என்பதும் இந்த திருமணத்திற்கு ஒட்டுமொத்த திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று இரண்டாம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு சாயிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரொமான்ஸ் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். ஆர்யாவின் கன்னத்தோடு கன்னம் ஒட்டி நின்றவாறு இருக்கும் இந்த புகைப்படத்தை பதிவு செய்து இரண்டு மணி நேரத்திற்குள் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்கள் கிடைத்துள்ளது என்பதும் ஏராளமான வாழ்த்துக்கள் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இயக்குநர் அட்லியின் மனைவி ப்ரியா அட்லியும் இந்த புகைப்படத்தை லைக் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

’என்னுடைய அன்பு கணவருக்கு திருமண வாழ்த்துக்கள் என்றும் நான் அவரை என்றும் நேசிப்பேன்’ என்றும் சாயிஷா அந்த புகைப்படத்தின் கேப்ஷனாக பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆர்யா தனது டுவிட்டரில் ’என்னுடைய ஒவ்வொரு நாளையும் சிறப்பான நாளாக்கிய எனது மனைவிக்கு நன்றி என கூறி திருமண வாழ்த்து தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி ஆர்யாவும் தனது டுவிட்டரில் ஒரு ரொமான்ஸ் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.