close
Choose your channels

3 குழந்தைகளுடன் செல்வராகவனின் குடும்ப புகைப்படம்: இவ்வளவு வளர்ந்துவிட்டாரா மகள்?

Friday, September 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மூன்று குழந்தைகளுடன் கூடிய செல்வராகவனின் குடும்ப புகைப்படம் இணையதளங்களில் வைரலாக வருவதை அடுத்து அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செல்வராகவனின் மகள், மகன் இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டார்களே என ஆச்சரியத்தில் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன் என்பதும் தற்போது அவர் இயக்குனராக மட்டுமின்றி ஒருசில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. செல்வராகவன் நடிப்பில் உருவான ‘பகாசூரன்’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் அதேபோல் அவர் இயக்கிய தனுஷின் ’நானே வருவேன்’ திரைப்படமும் இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் செல்வராகவன் அவ்வப்போது தனது மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை பதிவு செய்து வருவார். அந்த வகையில் அவர் சமீபத்தில் தனது மூன்று குழந்தைகள் மற்றும் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் அந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.

செல்வராகவனின் மூத்த மகளும், இரண்டாவது மகனும் நன்றாக வளர்ந்து விட்டதை பார்த்த நெட்டிசன்கள், செல்வராகவன் குழந்தைகள் இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டார்களே என்று ஆச்சரியத்தில் கமெண்ட்ஸ்களை பதிவு செய்துவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.