close
Choose your channels

தனுஷின் 'பவர்பாண்டி'யில் இணைந்த செல்வராகவன்

Tuesday, November 1, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com


தனுஷ் நடித்த 'கொடி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி நல்ல ரிசல்ட்டை பெற்றுள்ள நிலையில் அவர் தற்போது 'பவர்பாண்டி' என்ற படத்தை முதன்முதலாக இயக்கி வருகிறார்.
ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயாசிங் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் பிரபல இயக்குனரும் தனுஷின் சகோதரருமான செல்வராகவன் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதுவரை தனது படங்களுக்கு மட்டுமே பாடல்கள் எழுதி வந்த செல்வராகவன் தற்போது 'பவர்பாண்டி' படத்திற்காக இரண்டு பாடல்களை எழுதியுள்ளார். இவற்றில் ஒரு பாடலை இரண்டு நிமிடத்திலும் இன்னொரு பாடலை ஐந்து நிமிடத்திலும் எழுதிக்கொடுத்து படக்குழுவினர்களை அசத்தியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.