close
Choose your channels

இந்திய திரையுலகில் முதல்முறையாக ஃபர்ஸ்ட்லுக் ரிலீசுக்கு பிரமாண்டவிழா

Wednesday, November 16, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஷங்கர் என்றாலே பிரமாண்டம்தான் என்பது அனைவரும் அறிந்ததே. இதில் ஷங்கருடன் லைகா நிறுவனம் சேர்ந்தால் பிரமாண்டத்தின் எல்லையை வரையறுக்கவே முடியாது. பாடல் வெளியீடு, பட வெளியீடு ஆகியவற்றையே ஒருசில பட அதிபர்கள் எளிமையாக நடத்தி வரும் நிலையில் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லைகா தயாரிப்பில் உருவாகி வரும் '2.0' படத்தின் பர்ஸ்ட்லுக் விழாவுக்கே மிகப்பெரிய தொகை செலவு செய்யப்பட்டு பிரமாண்டமான விழா ஒன்று நடைபெறவுள்ளது.,
வரும் 20ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ள இந்த விழாவில் ரஜினிகாந்த், ஷங்கர், சுபாஷ்கரன், ஏ.ஆர்.ரஹ்மான், எமிஜாக்சன் உள்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர். பாலிவுட்டின் பிரமாண்ட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கரண்ஜோஹர் இந்த விழாவை தொகுத்து வழங்கவுள்ளார்.
இந்திய திரையுலகில் முதல்முறையாக ஒரு படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கே மிகப்பெரிய அளவில் விழா நடத்தி கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த விழா லைகா நிறுவனத்தின் யூடியூப் வீடியோ சேனல் மற்றும் ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ் ஆப்ஸ்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.