close
Choose your channels

ஷங்கரின் உதவி இயக்குனருக்கு இப்படி ஒரு நிலையா? பிச்சை எடுக்கும் அவலம்..!

Saturday, March 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லி உட்பட ஒரு சில இயக்குனர்கள் தற்போது திரையுலகின் உச்சத்தில் இருக்கும் நிலையில் அவரிடம் உதவி இயக்குனராக இருந்த ஒருவர் உணவு, உடை, இருப்பிடம் கூட இல்லாமல் பிச்சை எடுத்து வரும் அவல நிலையில் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா ஆசை காரணமாக வெளியூரிலிருந்து சென்னை வந்தவர்களில் ஒரு சதவீதம் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர் என்பதும் மீதி 99% பலர் சரியான வாய்ப்பு கிடைக்காமல் வேறு வேலையும் பார்க்க முடியாமல் வாழ்க்கை தொலைத்தவர்கள் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பாரதிராஜா, ஷங்கர் உள்பட முன்னணி இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக இருந்தவர் செல்வேந்திரன். ஷங்கர் இயக்கத்தில் உருவான ’காதலன்’ ’ஜீன்ஸ்’ ‘இந்தியன்’ போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த இவர் ’ஒரு காதலன் ஒரு காதலி’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இன்று பிரபலமாக இருக்கும் நடிகை லட்சுமி ராயை இந்த படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் செய்தவர் இவர் தான் என்பதும் இந்த படத்தில் ரம்பா முக்கிய கேரக்டரில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் அவருக்கு வேறு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் செல்வேந்திரன் தற்போது உணவு, உடை, இருப்பிடம் கூட இல்லாமல் தெருவில் வசித்து வருவதாகவும் சாப்பாட்டுக்காக அவர் பிச்சை எடுப்பதாகவும் கூறப்படுகிறது. இவரது இன்றைய நிலை கருத்தில் கொண்டு அவருக்கு உதவி செய்ய திரையுலகினர் முன் வரவேண்டும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.