close
Choose your channels

ஷங்கரின் அடுத்த படத்தின் பட்ஜெட் ரூ.1000 கோடி? நாயகன் இந்த மாஸ் ஹீரோவா?

Saturday, September 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது ராம்சரண் தேஜாவின் ’ஆர்சி 15’ மற்றும் கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ ஆகிய படங்களை இயக்கி வரும் நிலையில் அடுத்ததாக அவர் இயக்கயிருக்கும் படத்தின் பட்ஜெட் ரூ 1000 கோடி என்று கூறப்படுகிறது.

‘இந்தியன்2’ மற்றும் ’ஆர்சி 15’ ஆகிய படங்களை முடித்துவிட்டு இயக்குனர் ஷங்கர் ஒரு சரித்திரப் படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படம் மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதிய ’வேள்பாரி’ என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக திரைக்கதை அமைக்கும் பணியை எம்பி சு வெங்கடேசன் என்று தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் சூர்யா நாயகனாக ’வேள்பாரி’ கேரக்டரில் நடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் ரூ.1000 கோடி செலவில் உருவாகும் இந்த படம் தமிழ் உள்பட இந்தியாவின் பல மொழிகளில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ’பொன்னியின்’ செல்வன் என்ற சரித்திர திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் சூர்யாவின் அடுத்த படமான ’சூர்யா 42’ திரைப்படமும் சரித்திர படம் என்று நேற்று தகவல் வெளியானது. இந்நிலையில் ஷங்கரின் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் திரைப்படமும் சரித்திர படம் என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.