close
Choose your channels

'நான் சம்பாதித்த உண்மையான செல்வம் இதுதான்.. ஷங்கரின் வைரல் புகைப்படம்..!

Friday, August 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் ஷங்கர் தனது சக இயக்குனர்களை சந்தித்து பேசிய நிகழ்வை குறிப்பிட்டு ’நான் சம்பாதித்த உண்மையான செல்வம் இதுதான்’ என நெகிழ்ச்சியுடன் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இயக்குனர் மணிரத்னம் வீட்டில் பிரபல இயக்குனர்கள் சந்திக்கும் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. இயக்குனர்கள் ஷங்கர், ஏஆர் முருகதாஸ், லோகேஷ் கனகராஜ், சசி, கௌதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், லிங்குசாமி உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்

இந்த நிகழ்வின்போது இயக்குநர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது. இது குறித்த புகைப்படத்தை ஷங்கர் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.

ஒரு சிறப்பான மாலை நேரத்தை கொண்டாட ஏற்பாடு செய்த மணிரத்னம் அவர்களுக்கு எனது நன்றி. இந்த சிறந்த கொண்டாட்டத்தில் சக இயக்குனர்களிடம் பழகியது, திரைப்படங்களை உருவாக்கும் போது ஏற்பட்ட நினைவுகளை பகிர்வது, உள்ளிட்ட சிறப்பான அனுபவம் கிடைத்தது.

மேலும் இளையராஜா மற்றும் ஏஆர் ரகுமானின் சில எவர்க்ரீன் பாடல்களையும் கேட்கும் தருணம் கிடைத்தது. இந்த தருணம் தான் நான் உண்மையாக சம்பாதித்த செல்வமாக கருதுகிறேன். எங்களை சிறப்பாக உபசரித்த சுஹாசினி அவர்களுக்கும் எனது நன்றி’ என்று ஷங்கர் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.