close
Choose your channels

மிஸ் இந்தியா இறுதி போட்டியில் இருந்து திடீரென விலகிய நடிகை: என்ன காரணம்?

Wednesday, June 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

2022 ஆம் ஆண்டின் மிஸ் இந்தியா இறுதிப்போட்டிக்கு தமிழகம் சார்பில் தகுதி பெற்றிருந்த நடிகை திடீரென இறுதி போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நட்சத்திர தம்பதிகளான டாக்டர் ராஜசேகர் - ஜீவிதா தம்பதிகளின் மகளும் நடிகையுமான ஷிவானி ராஜசேகர் 2022ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் இறுதிப் போட்டிக்கு தமிழகத்தின் சார்பில் தகுதி பெற்றிருந்தார். ஜூலை 3ஆம் தேதி இந்த இறுதிப் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் திடீரென இந்த போட்டியில் இருந்து விலகுவதாக ஷிவானி ராஜசேகர் தெரிவித்துள்ளார்

மிஸ் இந்தியா இறுதி போட்டி நடைபெறும் அதே தினத்தில் தனது மருத்துவ கல்லூரி செய்முறை தேர்வு இருக்கும் காரணத்தினால் போட்டியிலிருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு வருந்துகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மிஸ் இந்தியா அழகிப் போட்டி மற்றும் மருத்துவ தேர்வு ஆகிய இரண்டையும் ஒப்பிடும்போது மருத்துவ தேர்வுக்கு தான் முன்னுரிமை கொடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் அடுத்த ஆண்டு மீண்டும் மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்பேன் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் மிஸ் இந்தியா இறுதிப் போட்டியில் பங்கேற்கும் அனைத்து போட்டியாளர்களுக்கும் தனது வாழ்த்துக்கள் என்று கூறிய ஷிவானி, தன்னுடைய நல விரும்பிகளுக்கும் ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.