close
Choose your channels

சிம்பு மீதான பீப் பாடல் வழக்கு திடீர் வாபஸ்

Monday, December 28, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அனிருத் இசையில் சிம்பு பாடியதாக கூறப்படும் பீப் பாடல் கடந்த சில நாட்களாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சனை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிம்பு மீதும் அனிருத் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த பிரச்சனை நீதிமன்றம் வரையிலும் சென்று வரும் 4ஆம் தேதி இந்த வழக்கின் விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடைபெறவுள்ளது. சிம்புவை பிடிக்க தனிப்படை அமைத்திருப்பதாக கூறப்படும் நிலையில் அனிருத் இன்னும் கனடாவில் இருந்து சென்னை திரும்பவில்லை. இந்நிலையில் சிம்பு மீது அரசியல் கட்சி ஒன்றின் சார்பில் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒரு அரசியல் கட்சியின் சார்பாக வெங்கடேஷ் என்பவர் சிம்பு மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை இன்று வாபஸ் பெற்றுள்ளார். தனது கட்சியின் மேலிடம் கேட்டுக்கொண்டதற்காக இந்த வழக்கை அவர் வாபஸ் பெற்றுள்ளதாக கூறியுள்ளார். இருப்பினும் சிம்பு மீது பதிவு செய்யப்பட்ட மற்ற வழக்குகளின் விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.