close
Choose your channels

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சிம்பு

Saturday, April 21, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் சீமானை கைது செய்யப் போவதாக ஒரு  வதந்தி பரவியதை அடுத்து நாம் தமிழர் கட்சியினர்களுடன் நடிகர் மன்சூர் அலிகானும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் செய்த வாக்குவாதம் காரணமாக மறுநாள் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து விளக்கம் கேட்க இன்று நடிகர் சிம்பு சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று வந்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'சென்னையில் போராட்டத்தின் போது காவல்துறையினரை தாக்கியதில் உடன்பாடில்லை. ஐ.பி.எல். போராட்டத்தின் போது கடமையை செய்ய வந்த காவலரை தாக்கியது தவறு; அதற்கு முன் என்ன நடந்தது என தெரியாது. மன்சூர் அலிகான் தவறாக பேசியிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்; மன்சூர் அலிகான் கைது சரியென்றால் அவரை போல் பேசிய அனைவரையும் கைது செய்ய வேண்டும்' என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.