close
Choose your channels

இன்று நயன்தாரா, நாளை சிம்பு: தரமான சம்பவம் இருக்கு!

Wednesday, November 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் பிறந்தநாள் இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் அவருடைய பிறந்தநாளை அடுத்து இன்று காலை 9.09 மணிக்கு அவர் நடித்து வரும் ’நெற்றிக்கண்’ என்ற திரைப்படத்தின் டீசர் வெளியானது என்பதும் தெரிந்ததே. இந்த டீசருக்கு பெரும்பாலான ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பதால் இந்த டீஸர் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று காலை 9.09 மணிக்கு நயன்தாராவின் ’நெற்றிக்கண்’ டீசர் வெளியானதை அடுத்து நாளை காலை அதே 9.09 மணிக்கு சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படத்தின் சிறப்பு அறிவிப்பு ஒன்று வெளிவர உள்ளது. இதனை இயக்குனர் வெங்கட்பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்

அன்பான சிம்பு ரசிகர்களே, தயாராக இருங்கள். ’மாநாடு’ குறித்த முக்கிய அறிவிப்பு நாளை காலை 9.09 மணிக்கு வெளியாக உள்ளது என்று அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து ’மாநாடு’ திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு என்னவாக இருக்கும் என்று சிம்பு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்

இன்று 9.09 மணிக்கு நயன்தாரா ரசிகர்களுக்கு கிடைத்த டீசர் விருந்து, நாளை 9.09 மணிக்கு சிம்பு ரசிகர்களுக்கு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.