close
Choose your channels

சிம்பு படத்தின் டைட்டிலாக மாறிய 'சிசிவி' மாஸ் வசனம்

Wednesday, November 7, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடித்த சிசிவி என்ற 'செக்க சிவந்த வானம்' படத்தில் சிம்புவுக்கு ஒரு மாஸ் வசனம் உண்டு. அது 'வந்தா ராஜாவாகதான் வருவேன்' என்பது ஆகும். இந்த வசனம் சிம்புவின் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த நிலையில் தற்போது இந்த வசனமே சிம்புவின் அடுத்த பட டைட்டிலாக அமைந்துள்ளது.

ஆம், சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. வந்தா ராஜாவாகதான் வருவேன்' என்ற இந்த டைட்டில் சிம்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ரஜினியின் 'பேட்ட', மற்றும் அஜித்தின் 'விஸ்வாசம்' ஆகிய படங்கள் வெளியாகவுள்ள பொங்கல் தினத்தில் இந்த படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் சிம்பு, கேத்ரினா தெரசா, மேகா ஆகாஷ், மகத், யோகிபாபு உள்பட பலர் நடித்து வருகின்றானர். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் தெலுங்கில் வெளியான 'Attarinktiki Karredi' என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.