close
Choose your channels

பாடகி சின்மயி வீட்டுக்கு வந்த இரட்டை புதுவரவு: ரசிகர்கள் வாழ்த்து

Wednesday, June 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் உள்பட இந்தியாவின் பல மொழிகளில் பாடல்களைப் பாடிய பிரபல பாடகி சின்மயி வீட்டுக்கு இரட்டை புதுமுகங்கள் வந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரபல பாடகி சின்மயி கடந்த 2014ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி ராகுல் ரவீந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு எட்டு ஆண்டுகள் கழித்து தற்போது இரட்டை குழந்தை உள்ளது. இது குறித்து சின்மயி தனது சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளதை அடுத்து அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

சின்மயி கர்ப்பமானது குறித்து எந்தவித தகவல்களையும் சமூக வலைதளங்களில் தெரிவிக்காமல் இருந்து தற்போது இரட்டை குழந்தைகள் பிறந்தவுடன் குழந்தை பிறந்தது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனது குழந்தைகளின் பிஞ்சு விரல்களை பிடித்து இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்த சின்மயி, ‘த்ரிப்தா மற்றும் ஷ்ரவாஸ் ஆகிய எங்களது குழந்தைகள் என்றைக்கும் ஆன பிரபஞ்சத்தின் மையம் என்றும், இனி இவர்கள் தான் எல்லாமும்’ என்று பதிவு செய்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தனது சமூக வலைத்தளத்தில் தனக்கு குழந்தை இல்லாதது குறித்தும், தான் பெண்ணாக இன்னும் முழுமையடையவில்லை என்று வருத்தத்துடன் கூறி வந்த சின்மயிக்கு தற்போது இரட்டை குழந்தை பிறந்ததை அடுத்து அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.