close
Choose your channels

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த நிதியுதவி!

Monday, May 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு உள்ளன என்பதும் இதனால் நலிந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் வேலையின்றி வருமானம் இன்றி கஷ்டப்படுவதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே பெப்ஸி உறுப்பினர்களுக்கு நடிகர்கள் தாராளமாக நிதி உதவி செய்ய வேண்டும் என ஆர்கே செல்வமணி கேட்டுக்கொண்டதற்கிணங்க நிதி உதவி குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் சங்க உறுப்பினர்களாக உள்ள நலிந்த நடிகர்களுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் தான் நடத்தி வரும் டிரஸ்ட் மூலம் ரூபாய் ஒரு லட்சம் நிதி கொடுத்து உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே தமிழக அரசின் கொரோனா தடுப்பு நிதிக்காக ரூபாய் 25 லட்சம் சிவகார்த்திகேயன் கொடுத்திருந்த நிலையில் தற்போது நடிகர் சங்கத்தில் உள்ள நலிந்த உறுப்பினர்களுக்காக ரூபாய் ஒரு லட்சம் கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து நடிகர் சங்கத்தின் சார்பில் அவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.