close
Choose your channels

எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்!

Wednesday, October 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பில் உருவான 'மான்ஸ்டர்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து நல்ல வெற்றியைப் பெற்றது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் அவர் தற்போது 'இறவைக்காலம்' மற்றும் 'உயர்ந்த மனிதன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனை அடுத்து பிரபல இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் ஒரு படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது

எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக 'மான்ஸ்டர்' படத்தின் நாயகி பிரியா பவானிசங்கர் மீண்டும் நடிக்கும் இந்தப் படத்தை ராதா மோகன் இயக்குகிறார். இளம் இசைஞானி யுவன் சங்கர்ராஜா இசையில், ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில், கதிர் கலை இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி வரும் டிசம்பரில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது

மேலும் இந்த படம் வரும் 2020ஆம் ஆண்டு காதலர் தினத்தில் வெளியிடவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இன்று இந்த படப்பிடிப்பு தொடங்குவதை அடுத்து படக்குழுவினருக்கு பிரபல இயக்குநர் ஏஆர் முருகதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.