close
Choose your channels

இது ஒன்றும் அவமானமல்ல, பெருமைதான்: சுஷாந்த்சிங் தற்கொலை விவகாரம் குறித்து பிரபல நடிகை

Tuesday, June 23, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் அவர்கள் சமீபத்தில் தனது வீட்டில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட் திரை உலகையே உலுக்கியது. அதுமட்டுமன்றி சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பாலிவுட் பிரபலங்கள் தான் காரணம் என்றும் அவருக்கு வந்த பட வாய்ப்புகளை வேண்டுமென்றே தட்டிப் பறித்ததால் அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து சல்மான்கான், கரன் ஜோகர் உள்பட 8 பாலிவுட் பிரபலங்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாலிவுட்டில், பிரபலங்களின் வாரிசுகள் தவிர வேறு யாரும் வளர்ச்சி அடைய முடியவில்லை என்றும் புதிதாக யாரும் திரை உலகில் வளர்ச்சி அடைந்தால் அவர்கள் நசுக்கப்படுகிறார்கள் என்றும் ரசிகர்கள் கொந்தளித்து எழுந்தனர். இதுகுறித்து ரசிகர்கள் காரசாரமாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதனால் பாலிவுட்டில் வாரிசு நடிகர் நடிகைகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் அனில் கபூரின் மகளும் பிரபல நடிகையுமான சோனம் கபூர், வாரிசு நடிகை என்ற குற்றச்சாட்டு குறித்து சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’ஆம் நான் என் தந்தையின் வாரிசுதான். அவரால்தான் நான் இந்த இடத்திற்கு வந்து உள்ளேன். இது ஒன்றும் எனக்கு அவமானம் அல்ல. இந்த இடத்தை எனக்கு கொடுக்க எனது தந்தை எவ்வளவு கடுமையாக உழைத்தார் என்பது எனக்கு மட்டுமே தெரியும். அவரது மகளாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்’ என்று கூறியுள்ளார்.

சோனம் கபூரின் இந்த பதிவுக்கு ஆதரவு மற்றும் எதிர்த்து கமெண்ட்டுகள் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.