close
Choose your channels

ஐசியூவில் கேக் வெட்டிய எஸ்பிபி: குடும்பத்தினர், டாக்டர்கள் மகிழ்ச்சி

Saturday, September 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருக்கு அமெரிக்க, பிரிட்டன் டாக்டர்கள் அறிவுரையின்படி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் எஸ்பிபி அவர்களுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் வரும் திங்கட்கிழமை எஸ்பிபி அவர்கள் குறித்த ஒரு நல்ல செய்தியை கிடைக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் எஸ்பிபி சரண் அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்

இந்த நிலையில் எஸ்பிபி அவர்களுக்கு இன்று திருமண நாள் என்பதை அடுத்து ஐசியூவிலேயே கேக் வெட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கேக், ஐசியூவில் வரவழைக்கப்பட்டு எஸ்பிபி மற்றும் அவருடைய மனைவி சாவித்ரி ஆகிய இருவரும் இணைந்து கேக் வெட்டி தங்களது திருமண நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். எஸ்பிபி படுத்துக்கொண்டே கேக் வெட்டிய இந்த நெகழ்ச்சியான நிகழ்வு அவரது குடும்பத்தினர் மற்றும் டாக்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து எஸ்பிபி மிக விரைவில் உடல்நலம் தேறி டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.