close
Choose your channels

எஸ்பிபி உடல்நிலை: சற்றுமுன் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை

Friday, August 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கடந்த சில நாட்களாக சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது என்பதும் அவரது மகன் எஸ்பிபி சரண் அவ்வப்போது தந்தையின் உடல்நிலை குறித்து அப்டேட்களை தெரிவித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் எஸ்பிபி சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனை இன்றைய எஸ்பிபி உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் எஸ்பிபி அவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் நேற்றைப் போலவே இன்றும் அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எஸ்பிபி அவர்களுக்கு வெண்டிலட்டர் மற்றும் எக்மோ கருவியின் உதவியுடன் உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையே அவரது உடல் ஏற்றும் அளவிற்கு நன்றாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையிலிருந்து எஸ்பிபி யின் உடல் நிலை நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது என்பது தெரிய வந்துள்ளதால் தற்போது எஸ்பிபியின் கோடிக்கணக்கான இசை ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.