close
Choose your channels

'ஆர்.ஆர்.ஆர்' வெற்றிக்காக புகழ் பெற்ற கோவிலுக்கு சென்ற எஸ்.எஸ்.ராஜமெளலி!

Monday, March 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக மீண்டும் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் சுற்றி படக்குழுவினர் புரமோஷன் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே துபாய் உள்பட ஒருசில வெளிநாடுகளில் புரமோஷன் செய்த படக்குழுவினர் டெல்லி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா, வாரணாசி, சென்னை, பெங்களூரு உள்பட பல உள்நாட்டு நகரங்களிலும் புரமோஷன் செய்தனர்.

இந்த நிலையில் தற்போது ’ஆர்.ஆர்.ஆர்’ படக்குழுவினர் பஞ்சாபில் உள்ள புகழ்பெற்ற பொற்கொவிலுக்கு சென்று ’ஆர்.ஆர்.ஆர்’ வெற்றிக்காக பிரார்த்தனை செய்தனர். இந்த பிரார்த்தனையில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி, ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் தேஜா, அஜய்தேவ்கான், ஆலியாபட், ஒலிவியா மோரிஸ், சமுத்திரக்கனி, ஸ்ரேயா சரண் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் சுமார் 400 கோடியில் தயாராகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.