close
Choose your channels

'பொன்னியின் செல்வன்' படத்தின் இந்த தகவலை கேட்டு ஆச்சரியம் அடைந்த எஸ்.எஸ்.ராஜமெளலி!

Wednesday, September 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் முக்கிய தகவலை கேட்டு பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி ஆச்சரியம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

‘பொன்னியின் செல்வன்’ திரைப் படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ஜெயம்ரவி ஆச்சரியமான தகவல் ஒன்றை கூறினார்.

சமீபத்தில் தான் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி அவர்களை சந்தித்தபோது அவரிடம் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் இரண்டு பாகங்கள் படப்பிடிப்பு குறித்து பேசி கொண்டிருந்தேன் என்றும், அப்போது இரண்டு பாகங்களை நாங்கள் 150 நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டோம் என்று நான் கூறியதை கேட்டு அவர் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் அடைந்தார் என்றும் தெரிவித்தார்.

நான் பிராங்க் செய்கிறேன் என்று நினைத்துக் கொண்டு அவர் திரும்பத் திரும்ப 150 நாட்களில் உண்மையிலேயே படம் முடிந்து விட்டதா என்று கேட்டபோது உண்மைதான் 150 நாட்களில் முடித்துவிட்டோம், அதற்கு முக்கிய காரணம் சரியான திட்டமிடல் மற்றும் செயல்முறை என்று நான் கூறியதை அடுத்து அவர் ஆர்வத்துடன் அந்த படப்பிடிப்பு எப்படி நடந்தது என்பது குறித்து கேட்டார் என்றும் ஜெயம்ரவி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் உருவான ’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய இரண்டு படங்களும் 600 நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டு பாகங்களும் 150 நாட்களில் படப்பிடிப்பு முடிந்துள்ளதற்கு மணிரத்தினம் அவர்களின் சரியான திட்டமிடல் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.