close
Choose your channels

ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீண்டும் கைது: இம்முறை என்ன காரணம்?

Tuesday, July 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்ரீரங்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று கனல் கண்ணன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

கிறிஸ்தவ மதம் குறித்து கனல் கண்ணன் சர்ச்சைக்குரிய வகையில் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததாக திமுகவை சேர்ந்த ஜோசப் பெனடிக் என்பவர் புகார் அளித்தார்

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜரான கனல் கண்ணனை விசாரணை செய்த சைபர் கிரைம் போலீசார், விசாரணைக்கு பின் கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

சமூக வலைதளத்தில் மத போதகரின் நடன வீடியோவை வெளியிட்டது தொடர்பான புகாரில்தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. கைது செய்யப்பட்ட கனல் கண்ணனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.