close
Choose your channels

தூத்துகுடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட பிரபல ஸ்டண்ட் மாஸ்டரின் மாப்பிள்ளை

Tuesday, May 22, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தூத்துகுடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட பிரபல ஸ்டண்ட் மாஸ்டரின் மாப்பிள்ளை

தூத்துகுடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மூன்று மாதங்களுக்கும் மேல் போராடி வரும் அப்பகுதி மக்கள் இன்று போராட்டத்தின் 100வது நாள் என்பதால் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்த நிலையில் போராட்டம் திடீரென கலவரமாக மாறியதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒரு பெண் உள்பட 9 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த ஒன்பது பேரில் பிரபல கோலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டண்ட் சில்வா அவர்களின் தங்கை கணவரும் ஒருவர் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இதுகுறித்து ஸ்டண்ட் சில்வா தனது முகநூலில் கூறியதாவது:

என் தங்கையின் கணவர் ஆறுயிர் மாப்பிள்ளை J.செல்வராஜ் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் அநியாயமாக போலீசாரால் சுட்டுக்கொல்லப்டார் . மிக்க வேதனையோடு பகிர்கிறேன்' என்று கூறியுள்ளார். ஸ்டண்ட் சில்வாவுக்கு கோலிவுட் திரையுலகினர் ஆறுதல் கூறி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.