close
Choose your channels

முதல்வரை சந்திக்க தனி விமானத்தில் பறந்த திரையுலக சூப்பர் ஸ்டார்கள்!

Thursday, February 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்திக்க தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார்கள் தனி விமானத்தில் பறந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சமீபத்தில் வெளியிட்ட உத்தரவு காரணமாக திரையரங்குகளில் அதிரடியாக கட்டணங்கள் குறைக்கப்பட்டன. அது மட்டுமன்றி அனைத்து திரையரங்குகளிலும் ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட் விற்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

ஆந்திர அரசின் இந்த உத்தரவு குறித்து திரையுலக பிரபலங்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வந்தனர். ‘ஆர்.ஆர்.ஆர்’ உள்பட பல பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸாக இருக்கும் நிலையில் அதிரடியாக திரையரங்கு கட்டணத்தை குறைத்ததற்கு திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தெலுங்கு முன்னணி நட்சத்திரங்களான சிரஞ்சீவி, மகேஷ்பாபு, பிரபாஸ், இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்டோர் இன்று தனி விமானத்தில் ஹைதராபாத்தில் இருந்து விஜயவாடா சென்றனர். மேலும் இன்று மகேஷ்பாபுவின் திருமண நாள் என்பதால் விமானத்திலேயே அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு திரையுலக பிரபலங்களின் சந்திப்புக்குப் பின்னர் ஆந்திர முதல்வர் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.