close
Choose your channels

ரஜினியை கண்கலங்க வைத்த சிவகார்த்திகேயன்: அப்படி என்ன செய்தார்?

Thursday, May 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சிவகார்த்திகேயன் கண்கலங்க வைத்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது .

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில், சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான திரைப்படம் ’டான்’. இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பாக கடைசி அரை மணி நேரம் படம் பார்த்த அனைவரையும் கண் கலங்க வைத்துவிட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ’டான்’ திரைப்படத்தை சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பார்த்துள்ளார். படம் பார்த்து முடித்தவுடன் ’டான்’ படக்குழுவினர்களுக்கு போனில் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது ’அந்த கடைசி 30 நிமிடங்கள் என்னால் கண்ணீரை தடுக்க முடியவில்லை’ என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது .

ரஜினி பாராட்டை அடுத்து ’டான்’ படக்குழுவினர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.