close
Choose your channels

ரஜினியின் '2.0' படப்பிடிப்பில் பிரச்சனை. ஷங்கரின் உதவியாளர் உள்பட 2 பேர் கைது

Wednesday, March 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று நடைபெற்று வந்தபோது அங்கிருந்த புகைப்பட பத்திரிகையாளர்களுக்கும் படக்குழுவினர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த பிரச்சனையின்போது புகைப்பட பத்திரிகையாளர்களை '2.0' படத்தின் படக்குழுவினர் தாக்கியதாகவும், இதுகுறித்து கொடுக்கப்பட்ட போலீஸ் புகார் காரணமாக இயக்குனர் ஷங்கரின் உறவினர் மற்றும் அவரது உதவி இயக்குமருமான பப்பு என்பவர் கைது செய்யப்பட்டதாகவும், அவருடன் மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
இதுகுறித்து லைகா தரப்பினர்களிடம் நாம் பேசியபோது, 'படப்பிடிப்பில் வெறும் வாக்குவாதம் மட்டுமே நடந்ததாகவும், யாரையும் 2.0 படக்குழுவினர் தாக்கவில்லை என்றும் தற்போது தான் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று கொண்டிருப்பதாகவும், இன்னும் சில நிமிடங்களில் என்ன நடந்தது என்பதை முழுமையாக ஊடகத்திற்கு விளக்கம் அளிக்கவிருப்பதாகவும் கூறினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.