close
Choose your channels

சூர்யா படங்களின் '100 நாட்கள்' திட்டம்

Sunday, September 6, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'மாஸ்' படத்தை அடுத்து சூர்யா நடித்து வரும் '24' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து, அடுத்த 100 நாட்களில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் மற்றும் கிராபிக்ஸ் பணிகளை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 'யாவரும் நலம்', 'மனம்' படங்களின் இயக்குனர் விக்ரம் குமார் இயக்கி வரும் இந்த படத்தில் சூர்யாவுடன் சமந்தா, நித்யாமேனன், அஜய், சத்யன், சரண்யா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமத்து வருகிறார்.

இந்நிலையில் செப்டம்பரில் '24' படத்தின் படப்பிடிப்பை முடிக்கும் சூர்யா, ஒரு மாதம் மட்டும் இடைவெளி விட்டு உடனே நவம்பரில் ஹரியின் இயக்கத்தில் உருவாகவுள்ள 'சிங்கம் 3' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார். இயக்குனர் ஹரி எப்போதுமே திட்டமிட்டு படப்பிடிப்பை தொடங்கி குறித்த காலத்திற்குள் முடித்துவிடும் வல்லமை படைத்தவர். அதன்படி இந்த 'சிங்கம் 3' படப்பிடிப்பை சரியாக 100 நாட்களில் படப்பிடிப்பு நடத்தி அதற்குள் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளார்.

சூர்யாவின் '24' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் 100 நாட்களிலும், சூர்யாவின் 'சிங்கம் 3' படப்பிடிப்பு 100 நாட்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது போல் இந்த இரண்டு படங்களும் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற வேண்டும் என்பதே அனைவரும் விருப்பமாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.