close
Choose your channels

S3-ல் இருந்து மீண்டும் 24-க்கு திரும்பிய சூர்யா

Wednesday, February 17, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்த '24' படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் ஹரி இயக்கும் 'S3' படத்தின் படப்பிடிப்பில் சூர்யா கலந்து கொண்டார். இந்நிலையில் டப்பிங் பணிக்காக மீண்டும் '24' படத்திற்கு அவர் திரும்பியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


'S3'படத்தின் படப்பிடிப்பில் சூர்யாவுக்கு ஒரு சிறு இடைவெளி கிடைத்துள்ளதால் அந்த இடைவெளியை அவர் '24' படத்தின் டப்பிங்கிற்கு பயன்படுத்தியுள்ளார். இன்னும் ஒருசில நாட்களில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்துவிடும் என்றும் வரும் தமிழ்ப்புத்தாண்டை ஒட்டி இந்த படம் ரிலீஸ் செய்ய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

மூன்று வித்தியாசமான வேடங்களில் சூர்யா நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நித்யாமேனன் நடித்துள்ளனர். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை விக்ரம்குமார் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2D நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.