close
Choose your channels

சமாதானம் செய்ய வந்த சூர்யா மீது போலீஸ் புகார்.

Tuesday, May 31, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை அடையாறு அருகே உள்ள ஒரு சாலையில் பெண் ஓட்டுனர் ஒருவரும் கால்பந்தாட்ட வீரர் ஒருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் நிலையில் அவர்களை சமாதானப்படுத்த வந்த நடிகர் சூர்யா மீது காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விபரம் பின்வருமாறு
சென்னையை சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் பிரேம்குமார் என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் பயிற்சிக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு முன்னாள் சென்ற கார் திடீரென பிரேக் போட்டு நின்றதால் நிலைகுலைந்து போன அவர் காரின் பின்புறம் மோதியுள்ளார்.
காரின் பின்புறமும், மோட்டார் சைக்கிளின் முன்புறமும் சேதமடைந்ததால் காரை ஓட்டி வந்த பெண்ணுக்கும், கால்பந்தாட்ட வீரர் பிரேம்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அந்த நேரத்தில் அவ்வழியே வந்த நடிகர் சூர்யா இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சமாதானப்படுத்த வந்த சூர்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரேம்குமார், தன்னை சூர்யா தாக்க வந்ததாக சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சமாதானம் செய்ய வந்த சூர்யா மீது போலீஸ் புகார் அளிக்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.