close
Choose your channels

சூர்யாவால் கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்திற்கு ஏற்பட்ட தாமதம்?

Friday, August 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்து வரும் படம் ஒன்றால் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு காரைக்குடி பகுதியில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பும் அதே காரைக்குடியில் தொடங்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் காரைக்குடி மாவட்ட நிர்வாகம் ஒரே நேரத்தில் இரண்டு படங்களின் படப்பிடிப்புக்கு அனுமதி தர முடியாது என்றும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அதிக கூட்டங்களை மாவட்டத்தில் அனுமதிக்க முடியாது என்றும் கூறியதாக தெரிகிறது.

எனவே சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் அதே பகுதியில் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20ஆம் தேதி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ஆகஸ்ட் 21 அல்லது 22 ஆம் தேதியிலிருந்து கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.