close
Choose your channels

பாலா படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கின்றாரா சூர்யா? படக்குழுவினர் விளக்கம்

Saturday, April 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பேரழகன், மாஸ் என்ற மாசிலாமணி, வேல், வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு, மாற்றான் ஆகிய படங்களில் சூர்யா இதுவரை இரட்டை வேடங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது அவர் பாலா இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ’சூர்யா 41’ படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் இணையதளங்களில் கசிந்தது.

இதுகுறித்து படக்குழுவினர் விளக்கம் அளித்தபோது ’சூர்யா 41’ படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடிக்கவில்லை என்றும் ஒரே ஒரு வேடத்தில் அதுவும் இதுவரை நடிக்காத வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார்கள் என்று கூறியுள்ளனர். மேலும் இந்த படத்தில் சூர்யா காது கேட்காத மாற்றுத்திறனாளி வேடத்தில் நடிப்பதாக வெளிவந்த தகவலும் வதந்தி என்றே கூறப்படுகிறது.

கீர்த்தி ஷெட்டி சூர்யாவுக்கு ஜோடியாகவும், மலையாள நடிகை மமிதா பைஜூ சூர்யாவின் தங்கையாகவும் நடிக்க உள்ளதாகவும் இருவருக்குமே இந்த படத்தில் சம அளவில் முக்கியத்துவம் இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் .

தற்போது கன்னியாகுமரியில் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் அடுத்ததாக மதுரை மற்றும் கோவாவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. பாலா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் உருவாகும் இந்தப் படம் சூர்யாவின் வெற்றி படங்களில் ஒன்றாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.