close
Choose your channels

மும்பை சிட்டியில் வாக்கிங் செல்லும் சூர்யா-ஜோதிகா: வைரல் புகைப்படம்!

Wednesday, December 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மும்பை சிட்டியில் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் அதிகாலையில் வாக்கிங் செல்லும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் அதனை அடுத்து அவர் நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன் குடும்பத்துடன் அவர் கேரளாவுக்கு ஓய்வு எடுக்க சென்றதாக கூறப்பட்டது. அதன்பின் கேரளாவில் இருந்து கோவா சென்ற சூர்யா குடும்பத்தினர், அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாடியதாகவும், அதன் பின்னர் தற்போது மும்பைக்கு சென்று உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது நிலையில் மும்பையில் உள்ள சூர்யா ரசிகர் ஒருவர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் அதிகாலையில் வாக்கிங் சென்ற போது எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாலா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து முடித்த பின்னர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படமும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘வாடிவாசல்’ படத்திலும் சூர்யா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.