close
Choose your channels

பாடகியை அடுத்து சிவகுமார் மகளின் அடுத்த அவதாரம்: சூர்யா, கார்த்தி வாழ்த்து!

Saturday, September 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகளும், சூர்யா கார்த்தியின் சகோதரியுமான பிருந்தா ஏற்கனவே பாடகியாக இருந்த நிலையில் தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார். இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகள் பிருந்தா ஒரு பாடகி என்பது ஏற்கனவே அனைவரும் அறிந்ததே. ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், உட்பட ஒரு சில படங்களில் அவர் பாடல்கள் பாடியுள்ளார் என்பதும் அந்த பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட்டாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாடகியை அடுத்து தற்போது டப்பிங் ஆர்டிஸ்டாக களமிறங்கியுள்ளார் பிருந்தா. நேற்று வெளியான ’பிரம்மாஸ்திரா’ என்ற படத்தில் நாயகியான ஆல்யா பட் அவர்களுக்கு தமிழில் குரல் கொடுத்தது பிருந்தா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பிருந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள நிலையில் சூர்யா மற்றும் கார்த்தி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.