close
Choose your channels

திரைப்படமாகிறது சரவணன்பவன் ராஜகோபால்-ஜீவஜோதி வழக்கு: சூர்யா பட இயக்குனரின் முயற்சி!

Monday, July 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய உண்மை சம்பவமான சரவணன்பவன் ராஜகோபால்-ஜீவஜோதி வழக்கை அடிப்படையாக வைத்து ’ஜெய்பீம்’ இயக்குனர் ஞானவேல் திரைப்படம் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த ஓட்டல் அதிபர் சரவணபவன் ராஜகோபால் - ஜீவஜோதி இடையே நடந்த சட்டப் போராட்டம் குறித்து அனைவரும் அறிந்ததே. ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரை சரவணபவன் ராஜகோபால் கொலை செய்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு இருந்த நிலையில் இந்த குற்றம் சுப்ரீம் கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டு அவருக்கு தண்டனை அளிக்கப்பட்டது.

18 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு திரைப்படம் எடுக்க சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படத்தை இயக்கிய ஞானவேல் முன்வந்துள்ளார். இந்த படத்தை அவர் இந்தியில் படமாக்க உள்ளார் என்பதும் இந்தியில் அவர் இயக்கும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜங்கிள் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு ‘தோசா கிங்’ என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜீவஜோதி கேரக்டரில் பாலிவுட்டின் பிரபல நடிகை நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.