close
Choose your channels

பார்வதி அம்மாளை நேரில் சந்தித்து சூர்யா கொடுத்த உதவித்தொகை: எவ்வளவு தெரியுமா?

Wednesday, November 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்து தயாரித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் சமீபத்தில் அமேசானில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் இந்த படத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் உலக நாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் பாராட்டினார் என்பது தெரிந்ததே.

ஒரு சிலர் இந்த படத்தை கடுமையாக விமர்சனம் செய்து வந்தாலும் ஒட்டுமொத்த திரையுலக ரசிகர்கள் இந்த படத்துக்கு பெரும் ஆதரவை கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் ராசா கண்ணு மற்றும் பார்வதி அம்மாள் ஆகியோரின் உண்மைக்கதையை தழுவி எடுக்கப்பட்டதை அடுத்து பார்வதி அம்மாள் குடும்பத்திற்கு ஏற்கனவே ரூபாய் 10 லட்சம் வழங்குவதாக நடிகர் சூர்யா அறிவித்து இருந்தார்.

அந்த வகையில் தனது சார்பாக ரூபாய் 10 லட்சம் மற்றும் 2டி நிறுவனத்தின் சார்பாக ரூபாய் 5 லட்சம் என மொத்தம் 15 லட்ச ரூபாய் பார்வதி அம்மாளை நேரில் சந்தித்து நடிகர் சூர்யா வழங்கி உள்ளார். இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.