close
Choose your channels

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி கூறிய சூர்யா: எதற்கு தெரியுமா?

Saturday, October 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசைப்புயல் ஏஆர் ரஹ்மானுக்கு நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா நேற்று ’சூரரைப்போற்று’ திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது என்பது தெரிந்ததே.

மேலும் இந்த படத்தை தயாரித்த 2டி நிறுவனத்தின் சார்பில் ஜோதிகாவுக்கும் தேசிய விருது கிடைத்தது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா, நாயகி அபர்ணா பாலமுரளி மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆகியோர்களுக்கும் நேற்று தேசிய விருது வழங்கப்பட்டது.

இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது என்பதும் சூர்யா ரசிகர்கள் இந்த புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தேசிய விருது வாங்கிய சூர்யாவுக்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஏ.ஆர் ரஹ்மான் வாழ்த்துக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.