close
Choose your channels

வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்: மாதவனுக்கு சூர்யா அனுப்பிய குறுஞ்செய்தி

Saturday, September 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் ஜோதிகா, சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்ரியா, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று வெளியாகியிருக்கும் படம் 'மகளிர் மட்டும்'. இந்த படத்திற்கு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுத்துள்ளதால் இன்றும் நாளையும் ஹவுஸ்புல் காட்சிகளாக திரையரங்குகளில் ஓடும் என்பது முன்பதிவில் இருந்து தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் கெளரவ வேடத்தில் நடித்த நடிகர் மாதவனுக்கு தயாரிப்பாளர் என்ற முறையில் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சூர்யா அனுப்பிய குறுஞ்செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

என் சகோதரர் மாதவனுக்கு, எனக்கு வார்த்தைகள் போதவில்லை, உங்களுக்கு நன்றி சொல்லி மாளாது. நான் உங்களை ஒரு விஷயத்துக்காக அழைத்தேன், ஆனால் நான் குறிப்பிட வேண்டியதை நீங்கள் முன் கூட்டியே புரிந்து கொண்டு, "கவலையை விடுங்கள்.. செய்து முடித்துவிட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறினீர்கள், உங்களுக்கு நான் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் ப்ரோ. நட்பை மிக அழகாக மாற்றிவிட்டீர்கள்' என்று கூறியுள்ளார்.

சூர்யாவும் மாதவனும் 'ஆய்த எழுத்து' படத்தில் இணைந்து நடித்ததில் இருந்தே நெருக்கமான நட்பை கொண்டிருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.