close
Choose your channels

சுஷாந்த் சிங் மர்ம மரணம்: பிரேத பரிசோதனை செய்த மருத்துவரின் திடுக்கிடும் வாக்குமூலம்!

Monday, December 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகரும் தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்தவருமான சுஷாந்த் சிங் கடந்த 2020 ஆம் ஆண்டு திடீரென தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது மறைவு திரை உலகை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இன்றுவரை அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணம் தெரியவில்லை என்பதால் இது குறித்த வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சுஷாந்த் சிங் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் ஒருவரின் வாக்குமூலம் இந்த வழக்கில் திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது. சுஷாந்த் சிங் கழுத்தில் இரண்டு முதல் மூன்று காயங்கள் காணப்பட்டன என்றும் அவரது உடலில் மேலும் சில காயங்கள் இருந்ததையும் நாங்கள் பார்த்தோம் என்றும் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் ஒருவர் வாக்குமூலம் கொடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் அதே நேரத்தில் ஒருசில போலீஸ் உயர் அதிகாரிகள் சில புகைப்படங்கள் மட்டுமே எடுத்துவிட்டு போஸ்ட்மார்ட்டம் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும் அவர்களின் உத்தரவுபடி நாங்கள் செய்தோம் என்றும் சுஷாந்த் சிங் உடலை முதன் முறையாக பார்த்த போது அது தற்கொலை அல்ல, கொலை என்பதை நான் உணர்ந்தேன் என்றும் அதை சீனியர்களிடம் நான் தெரிவித்த போது நாம் விதிகளின்படி தான் செயல்பட வேண்டும் என்று அவர் கூறியதால் வேறு வழி இன்றி நான் அமைதியாக இருந்து விட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுஷாந்த் சிங் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் கொடுத்த இந்த வாக்கு மூலம் தற்போது நாடு முழுவதும் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.