close
Choose your channels

சயிரா நரசிம்மரெட்டி' படத்திற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்!

Tuesday, September 24, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு பெரிய ஸ்டாரின் திரைப்படம் வெளிவரும்போது திடீர்ச்சிக்கல் ஏற்படுவது கடந்த சில வருடங்களாக வழக்கமாகி வருகிறது. பல திரைப்படங்கள் தற்போது கோர்ட் படியேறிய பின்னர் தான் ரிலீஸ் ஆகின்றது

இந்த நிலையில் இந்திய திரையுலகின் பிரமாண்டமான திரைப்படமான ‘சயிரா நரசிம்மரெட்டி’ திரைப்படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் நிலையில் தற்போது இந்த படத்திற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்திய சுதந்திரத்திற்காக முதல்முதலில் குரல் கொடுத்த நரசிம்மரெட்டியின் குடும்பத்தினர் தற்போது இந்த படத்திற்கு சிக்கல் ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது

அவர்கள் இதுகுறித்து கூறியபோது, ‘நரசிம்ம ரெட்டி வாழ்க்கையை திரைப்படமாக்க எங்கள் குடும்பத்திற்கு ரூ.50 கோடி தருவதாக தயாரிப்பாளர் ராம்சரண் வாக்குறுதி அளித்து இருந்தார். ஆனால் சொன்னபடி பணம் தரவில்லை. இதனால் இந்த படத்துக்கு எதிராக வழக்கு தொடரவும் தயாராகி வருகிறோம்’ என்று கூறியுள்ளனர். இந்த நிலையில் இந்த பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாக தீர்க்க படக்குழுவினர் முயற்சித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.