close
Choose your channels

பல்லிக்கு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்: தமிழ் நடிகைகள் கருத்து!

Sunday, April 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பல்லிக்கு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் குறித்து தமிழ் நடிகைகள் தங்களது சமூக வலைத்தளத்தில் தெரிவித்த கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தேசிய பூங்கா ஒன்றில் மானிட்டர் வகை பல்லியை 3 பேர் சேர்ந்த கும்பல் ஒன்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. அதுமட்டுமின்றி இதனை அவர்கள் வீடியோவும் எடுத்துள்ளனர். இதுகுறித்து சிசிடிவி மூலம் கண்டுபிடித்த வனத்துறை அதிகாரிகள் அந்த கும்பலை பிடித்து அவர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெங்கால் மானிட்டர் இனத்தைச் சேர்ந்த பல்லி, பாதுகாக்கப்பட்ட உயிரினம் என்பதால் இந்த கும்பல் செய்த குற்றம் உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் பல்லிக்கு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘ஒருவேளை பல்லி குட்டையான ஆடைகளை அணிந்து இருந்திருக்கும் என நினைக்கிறேன்’ என்று கூறியுள்ளார் .

மேலும் இதுகுறித்து அஸ்வின் நடித்த ’என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தின் நாயகி தேஜஸ்வினி கூறியபோது, ‘அந்த பல்லி இரவு நேரத்தில் வெளியே வந்ததா? குட்டையான ஆடைகளை அணிந்து இருந்ததா? கவர்ச்சியாக உடம்பை காண்பித்ததா? குடிபோதையில் இருந்ததா? இந்த உலகம் பாதிக்கப்பட்டவரை எப்படி குற்றம் சொல்ல போகிறது என்பதை அறிய காத்திருக்கிறேன்’ என்று பதிவு செய்துள்ளார்.

பல்லிக்கு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் குறித்து தமிழ் நடிகைகள் தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.