close
Choose your channels

சென்னைக்கு குட்பை சொன்ன 'தமிழ்ப்படம் 2.0' படக்குழுவினர்

Tuesday, February 20, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த 'தமிழ்ப்படம்' நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'தமிழ்ப்படம் 2.0' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதல் பாகத்தில் நடித்த சிவா, திஷா பாண்டே இந்த இரண்டாவது பாகத்திலும் நாயகன், நாயகியாக நடிக்க இவர்களுடன் ஐஸ்வர்யா மேனன், சந்தீஷ், சந்தானபாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இதுவரை சென்னையில் நடைபெற்று வந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் மலேசியாவுக்கு செல்லவுள்ளனர். இதுகுறித்து இயக்குனர் சி.எஸ்.அமுதன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'குட்பை சென்னை, ஹலோ மலேசியா' என்று குறிப்பிட்டு மலேசியாவில் படப்பிடிப்பு நடக்கவுள்ளதை உறுதி செய்துள்ளார். இந்த படம் வரும் மே மாதம் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.