close
Choose your channels

காதல் திருமணம் செய்த கணவருடன் என்னை சேர்த்து வையுங்கள்: சின்னத்திரை நடிகை வழக்கு

Saturday, March 9, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காதல் திருமணம் செய்த கணவருடன் என்னை சேர்த்து வையுங்கள் என கோரிக்கை விடுத்து சின்னத்திரை நடிகை தீபா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நடிகை தீபா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆன நிலையில் கடந்த ஆண்டு கணேஷ் பாபு என்பவரை காதலித்து பின் பதிவுத் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தற்போது, கணவர் கணேஷ் பாபு தன்னை பிரிந்து வாழ்வதால் அவருடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் கணேஷ் பாபுவின் குடும்பத்தினர் தன்னை சாதி ரீதியாக இழிவுபடுத்தியதாகவும் தீபா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

சின்னத்திரையில் 'நாம் இருவர் நமக்கு இருவர்’ ’பிரியமான தோழி’ ’அன்பே சிவம்’ உள்ளிட்ட தொடர்களில் நடித்தவர் நடிகை தீபா. இவர் தனது முதல் கணவரை முறைப்படி விவாகரத்து செய்த பின்னர் சாய் கணேஷ் பாபு என்பவரை கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார்

திருமணம் நடந்த சில மணி நேரங்களில் இந்த திருமணம் குறித்த வீடியோவை தீபா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார். இவரது கணவர் சாய் கணேஷ், ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ’பாக்கியலட்சுமி’ உட்பட ஒரு சில சீரியல்கள் தயாரிப்பு மேலாளராக பணிபுரிந்து வருபவர் என்பதும் இவரும் ஒரு சில சீரியலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காதலை சாய் கணேஷ் பாபுவின் வீட்டில் ஏற்கவில்லை என்பதால் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தான் தற்போது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில் தனது கணவருடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என்று நடிகை தீபா வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.