close
Choose your channels

உன் சிறு அணைப்பில் ஓராயிரம் ஆறுதல் உணர்கிறேன்..! சின்னத்திரை பிரபலத்தின் வளைகாப்பு புகைப்படங்கள்..!

Sunday, February 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பெரிய திரை நட்சத்திரங்களைப் போலவே தற்போது சின்னத்திரை நட்சத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றனர் என்பதும் அவர்களது சமூக வலைதளங்களுக்கு மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் கிடைத்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சின்னத்திரை செய்தி வாசிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கண்மணி சேகர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கலர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ’இதயத்தை திருடாதே’ என்ற சீரியலில் நடித்த நவீனை கண்மணி சேகர் திருமணம் செய்து கொண்டார். இருவரது திருமண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வைரலானது என்பதும் தேனிலவு கொண்டாடிய புகைப்படங்களும் அவர்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வைரலானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் சமீபத்தில் கண்மணி சேகர் தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை சொன்ன நிலையில் தற்போது அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படங்களை கண்மணி சேகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் கேப்ஷனாக ‘உன் சிறு அணைப்பில் ஓராயிரம் ஆறுதல் உணர்கிறேன்’ என்றும் பதிவு செய்துள்ளார்.

இதனை அடுத்து இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பதும் நவீன் - கண்மணி சேகர் தம்பதிகளுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.