close
Choose your channels

நடிகர் 'தலைவாசல்' விஜய்யின் வருங்கால மருமகன் இந்த கிரிக்கெட் வீரரா? ஆச்சரிய தகவல்!

Friday, January 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் பிரபல குணசத்திர நடிகர் தலைவாசல் விஜய்யின் வருங்கால மருமகன் தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 1992 ஆம் ஆண்டு ’தலைவாசல்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் விஜய். இதனை அடுத்து அவர் தலைவாசல் விஜய் என்று அழைக்கப்பட்டு வருகிறார். கடந்த 25 ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பதும் குணசேத்திர கேரக்டர் மட்டுமின்றி வில்லன் வேடத்திலும் இவர் அசத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அஜித் நடித்த ’காதல் கோட்டை’ என்ற திரைப்படத்தில் இவரது கேரக்டர் இன்னும் அனைவருக்கும் ஞாபகம் இருக்கும் என்பதும் ’கவலைப்படாதே சகோதரா’ என்ற பாடல் ரசிகர்களின் மனதை வென்ற பாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தலைவாசல் விஜய்யின் மகள் ஜெயவிணா என்பவர் ஒரு நீச்சல் வீராங்கனை என்பதை ஏற்கனவே பார்த்தோம். சமீபத்தில் நேபாள நாட்டின் தலைநகர் காத்மெண்டுவில் நடந்த தெற்காசிய நீச்சல் போட்டியில் இவர் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தலைவாசல் விஜய் மகள் ஜெயவீணா, தமிழக கிரிக்கெட் வீரரான பாபா அபராஜித் என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டை சேர்ந்த பாபா அபராஜித், ரஞ்சித் கோப்பைக்காக தமிழ்நாட்டின் அணிக்காக விளையாடியவர் என்பதும் அதன் பின் 19 வயதுக்குட்பட்ட உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்திய ஏ அணியில் சிறந்த ஆல்ரவுண்டராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் பாபா அபராஜித் ம்ற்றும் ஜெயவீணா நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்துள்ளதாகவும் விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து ரசிகர்கள் இந்த வருங்கால தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.