close
Choose your channels

விஜய்யும் அஜித்தும் ரகசியமா துபாய்ல சந்திப்பாங்க: சொன்ன பிரபலம் யார் தெரியுமா?

Sunday, July 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய், அஜித் ஆகிய இருவரும் துபாயில் குடும்பத்துடன் அவ்வப்போது சந்தித்துக் கொள்வார்கள் என்று பிரபல இசையமைப்பாளர் கூறியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரை உலகின் மாஸ் நடிகர்களான விஜய் , அஜித் ஆகிய இருவரது படங்கள் வெளியாகும்போது அவரவர் ரசிகர்களுக்கு பெரும் திருவிழாவாக இருக்கும் என்பதும் இருதரப்பு ரசிகர்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வார்கள் என்பது தெரிந்ததே.

ஆனால் அதே நேரத்தில் விஜய், அஜித் ஆகிய இருவரும் நட்புடன் தான் இருக்கிறார்கள் என்றும், சென்னையில் அவர்களை அடிக்கடி சந்தித்துக் கொள்வார்கள் என்றும் குறிப்பாக இருவரும் பிறந்த நாளின் போது தங்களது வாழ்த்துக்களை நேரில் தெரிவித்து கொள்வார்கள் என்றும் ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் தற்போது பிரபல இசையமைப்பாளரும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தந்தையுமான கங்கை அமரன் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘அஜித், விஜய் ஆகிய இருவரும் அவ்வப்போது குடும்பத்துடன் துபாயில் சந்தித்து கொள்வார்கள் என்றும் அந்த சந்திப்பின்போது சிலநேரம் எங்களுடைய குடும்பமும் இருந்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். இந்த தகவல் அஜித், விஜய் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

மேலும் விஜய், அஜித் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் கதையை வெங்கட்பிரபு எழுதி வருவதாகவும் விரைவில் பிரமாண்டமான அறிவிப்பு வெளியாகும் என்றும் கங்கை அமரன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.