close
Choose your channels

தளபதி விஜய்யின் 'வாரிசு': அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த மாஸ் தகவல்

Monday, July 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த மாஸ் தகவல்கள் வெளியாகிய நிலையில் விஜய் ரசிகர்களுக்கு குஷி ஏற்பட்டுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில், தில்ராஜூ தயாரிப்பில், தமன் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’. இந்த படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்புகள் ஹைதராபாத் மற்றும் சென்னையில் நடந்தது.

இந்த நிலையில் இன்று முதல் 4வது கட்ட படப்பிடிப்பு தொடங்கி உள்ளதாகவும் இதில் விஜய் உள்பட முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இது ஒரு நீண்டகால படப்பிடிப்பு என்றும் இந்த படப்பிடிப்புடன் ‘வாரிசு’ படத்தின் முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படப்பிடிப்பில் ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு உள்பட பலர் நடிக்கும் இந்த படம், கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண கே.எல் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.