close
Choose your channels

அருவருப்பின் உச்சம், கேவலத்திலும் கேவலம்: போட்டு தாக்கும் தங்கர் பச்சான்

Tuesday, February 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக அரசியலை அருவருப்பின் உச்சம் என்றும் தமிழக அரசியல் குறித்த செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் கேவலத்திலும் கேவலம் என்றும் இயக்குனர் தங்கர்பச்சான் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் நிலவரம் குறித்து நடுநிலை வாக்காளர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி தமிழக அரசியல் குறித்த செய்திகளை வெளியிடுவதிலும் ஊடகங்கள் பாகுபாடு செய்து வருவதாகவும் ஒரு சில செய்திகளுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

அந்த வகையில் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் மற்றும் அரசியல் குறித்த செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் குறித்து இயக்குனர் தங்கர்பச்சான் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நிகழ்ந்து கொண்டிருக்கும் தமிழக அரசியல் அருவருப்பின் உச்சம் என்றால் தமிழ் ஊடகங்களின் செயல்பாடு அதைவிட கேவலத்திலும் கேவலம். இப்படிப்பட்டவர்கள் தான் சமுதாயத்தை வழிநடத்தும் நான்கு தூண்களில் ஒன்றா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். தங்கர்பச்சானின் இந்தக் டுவீட்டிற்கு எந்த அரசியல் கட்சியும் சாராத நடுநிலையாளர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.