close
Choose your channels

25 தோசை சாப்பிட்டு 'நீயா நானா' மூலம் பிரபலமான இளைஞர்.. ரயிலில் அடிபட்டு பரிதாப மரணம்..!

Monday, April 8, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் கோபிநாத் நடத்தி வரும் ’நீயா நானா’ நிகழ்ச்சியில் தனது மகன் 25 தோசை சாப்பிடுவான் என்று ஒரு பெண் பெருமையாக பேசி இருந்த நிலையில் அந்தப் பையன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்த தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு வாரமும் விஜய் டிவியில் ’நீயா நானா’ நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ’தோசை சாப்பிட வேண்டிய உணவு’ என ஒரு தரப்பு, ’தோசை ஒரு சாதாரண உணவு’ என்று இன்னொரு தரப்பு விவாதம் செய்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஒரு இளம் பெண் தனது அண்ணன் விதவிதமாக தோசை சாப்பிடுவார் என்றும் தன்னையே சுடச் சொல்வார் என்றும் கூறிய நிலையில் தனது மகனுக்கு அவரது அம்மா சப்போர்ட் செய்து பேசினார். தனது மகனுக்கு தோசை என்றால் மிகவும் பிடிக்கும் என்றும், 25 தோசை சாப்பிடுவார் என்றும் கூறினார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இந்த குடும்பம் பிரபலமான நிலையில் சில யூடியூப் சேனல்களுக்கும் இவர்கள் பேட்டி அளித்திருந்தார்கள்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தோசை சாப்பிடும் பிரணவ் தற்போது ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் கடந்த புதன்கிழமை அவர் மொபைல் போன் பேசிக்கொண்டே தண்டவாளத்தை கடந்து போகின்ற போது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதால் உயிரிழந்தார். இது குறித்த செய்தி ஊடகங்களில் வெளியாகி உள்ள நிலையில் நீயா நானா நிகழ்ச்சியை பார்த்தவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.