close
Choose your channels

வெற்றிடம் இருப்பது உண்மைதான், ரஜினி அதனை நிரப்புவார்: முன்னாள் திமுக அமைச்சர்

Thursday, November 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது ’தமிழகத்தில் ஆளுமையுள்ள, சரியான அரசியல் தலைவருக்கான வெற்றிடம் உள்ளது என்றும், இன்னும் அதை யாரும் நிரப்பவில்லை என்றும் தெரிவித்திருந்தார்

ரஜினியின் இந்த கருத்தை வைத்து பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ரஜினியை இதுவரை நேரடியாக விமர்சனம் செய்யாத தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூட ரஜினியின் இந்த கருத்தை கண்டித்து ’தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்பது உள்ளாட்சித் தேர்தல் வெற்றியின் மூலம் நிரூபிக்கப்பட்டு விட்டது என்றும், ரஜினிகாந்த் ஒரு நடிகர்தான் என்றும் அவர் அரசியல்வாதி இல்லை என்பதால் அரசியல் வெற்றிடம் கொடுத்து பேச தகுதியற்றவர் என்றும் கூறியிருந்தார்

அதேபோல் திமுக தரப்பில் இருந்து துரைமுருகன் அவர்களும், தேமுதிக தரப்பில் இருந்து பிரேமலதா விஜயகாந்த் அவர்களும் தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இல்லை என்று ரஜினிக்கு பதில் அளித்திருந்தனர்

இந்த நிலையில் மறைந்த திமுக தலைவர் மு கருணாநிதி அவர்களின் மகனும் முன்னாள் திமுக மத்திய அமைச்சருமான முக அழகிரி இன்று அளித்த பேட்டியின் போது ’தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பது உண்மைதான் என்றும் ரஜினி கூறியது போல் தமிழகத்தில் தலைமை தலைமைக்கு வெற்றிடம் இருப்பது உண்மைதான் என்றும் அந்த வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என்றும் கூறியுள்ளார்

அரசியல் வெற்றிடத்தை திமுக தலைவர் மு க ஸ்டாலின் நிரப்பிவிட்டதாக திமுக தரப்பினர் தெரிவித்து வரும் நிலையில், முன்னாள் திமுக அமைச்சர் ஒருவர் அரசியல் வெற்றிடம் இருப்பது உண்மை என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.