close
Choose your channels

பிக்பாஸ் ஓடிடியில் இந்த மூன்று போட்டியாளர்களா? இன்னொரு ஆச்சரிய தகவல்

Monday, January 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் இன்னும் 2 வாரத்தில் பிக்பாஸ் 5 வது சீசன் நிறைவு பெறப் போகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக் பாஸ் ஓடிடி என்ற புதிய நிகழ்ச்சி தமிழில் தொடங்கப்பட உள்ளதாகவும் இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஐந்து சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் 12 அல்லது 13 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் 3 போட்டியாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. வனிதா, அனிதா, ஜூலி ஆகிய மூவரும் இப்போதைக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஐந்து சீசன்கள் தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே இந்த பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முதலில் பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியை குறைந்த நாட்கள் மட்டுமே நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியை 70 நாட்கள் வரை நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.


வனிதா, அனிதா, ஜூலி ஆகிய மூவருமே அந்தந்த சீசன்களில் அதிகமாக பேசியதால் நெகட்டிவ் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் மூவரும் இணைந்து கலந்து கொள்ளும் சீசன் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.